...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Sunday, April 30, 2006

விகடனில் மதனின் பதில் சரிதானா?






(ஏப்ரல் / 2005 / 24 தேதியிட்ட ஆனந்தவிகடன் )

Receomand this post to other reades :

Friday, April 07, 2006

தேர்தல் பார்வை ...... வேதாரண்யம் தொகுதி

தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அ.தி.மு.க ,தி.மு.க வேட்பாளர் யார் என முன்கூட்டியே அறியபட்ட தொகுதி இதுவாகதான் இருக்கும்.இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் அ.தி.மு.கவிற்கு ஒரு முறை கூட வாய்ப்பு கிடைக்காமல் போகவே இந்த முறை கடும் போட்டிகளுக்கிடையே களம் காணுகிறது இந்த தேர்தல்.

அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளார் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் ஓ.எஸ்.மணியன்.முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் களம் காண்கின்றார். 1991 - ல் அம்மாவின் ஆட்சியில் ராஜ்ஜிய சபா உருப்பினராக இருந்தவர்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் மணிசங்கர் ஐயர் எம்.பியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி கண்டவர்.சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் அ.தி.மு.க இரண்டாக பிளவுபட்டு ஜெ. அணி ஏற்பட்டபோது அம்மாவிற்கு பாதுகாப்பு கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்.அந்த பாசத்தின் அடிப்படையில் அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் ராஜ்ஜிய சபா எம்.பி பதவி பின்னர் இடைகாலத்தில் அம்மா பதவியிறக்கம் செய்யப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக நியமிக்கப்படும் முன் இவரது பெயர்தான் முன்னிலையில் இருந்தது.விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கும் போதே அடிமட்ட தொண்டர்கள் "ஓ.எஸ்.மணியணை முதல்வாக்கிய அம்மாவிற்கு நன்றி என போஸ்டர்கள் வீதிகளை அலங்கரிக்க அம்மாவிற்கு வந்த கோபத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார்.இருந்தும் கழகத்தின் கொள்கைபரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.


தி.மு.கவில் ஏற்கனவே இரண்டு முறை எம்.எல்.ஏ வாக இருந்த மா.மீனாட்சிசுந்தரம் தி.மு.க பிளவு பட்டபோது ம.தி.மு.க பக்கம் சென்று விட்டார்.இதன் காரணமாக 1996 தேர்தலில் தி.மு.கவின் வேதாரண்யம் வட்ட செயலாளரும் கலைஞரின் பள்ளி தோழருமான செ.யூசூப். பெயர் முன்னிலையில் இருந்தது.பொருளாதார காரணங்களால் தற்போதைய எம்.எல்.ஏ எஸ்.கே.வேதரெத்தினம் தி.மு.க சார்பாக போட்டியிட்டு அமோக வெற்றிபெற்றார்.


பின்னர் 2001 தேர்தலில் முன்னால் எம்.எல்.ஏ ம.தி.மு.க விலிருந்து தி.மு.க விற்கு திரும்பி வந்தாலும் அவருக்கு கட்சியில் சீட் தரப்படவில்லை.தொகுதியில் நல்ல பெயரெடுத்த வேதரெத்தினத்திற்கு மாற்றாக யாரையும் நிருத்த முடியவில்லை.
தமிழ்நாட்டிலேயெ அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கலைஞரின் தனி பார்வைக்கு உள்ளானார்.


மக்கள் செல்வாக்கும் தொகுதிக்காக தன் சொத்துக்கள் பெரும்பகுதியை இழந்த தி.மு.க.வேட்பாடளர் எஸ்.கே.வேதரெத்தினமும்,

ரோடு போடும் கருவிகள் மட்டும் கோடிகணக்கான ரூபாய் மதிப்பில் வைத்துள்ள மாவட்டத்தின் பெரிய கண்ட்ராக்ட்காரரும்,கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும் அ.தி.மு.கவின் வேட்பாளருமான ஓ.எஸ். மணியனும் கடும் போட்டிகளுக்கிடையே களம் காணுகின்றனர்.

இருந்தும் இந்த இரு வேட்பாளர்களும் காண்ட்ராக்ட் தொழிலில் நண்பர்கள்.
வெற்றியும் தோல்வியும் வாக்காளர் கையிலா வேட்பாளர் கையிலா? .........பார்க்கலாம்.

எப்படியோ யார் வெற்றி பெற்றாலும் இந்த தொகுதிக்கு ஒரு மந்திரி பதவி நிச்சயம்!.........
அமையும் ஆட்சியின் சாதகத்தை பொருத்து.

Receomand this post to other reades :

Saturday, April 01, 2006

ஹலோ அங்கிள்...

பறவைகள் கூடு திரும்பும் அந்தி வேளை
பணியிடம் சென்று திரும்புகையில்
என்னுடன் தினமும்
மண்மீது தடம் பார்த்து
சின்ன நடை போடும் என் சினேகிதி!


இன்றோடு நான்கு நாட்கள்
ஊரிலிருந்து உறவுகள் விட்டு
உழைப்பு தேடி வந்த கணவருக்கு
உற்ற துணையாக
கற்ற கல்வி கொண்டு
ஏற்ற வேலை
இனிதே கிடைத்ததே!

எங்கோ பார்த்த முகம்
அவளும் சிரிக்க முயலுகின்றாள்
என் பங்குக்கு நானும் அவளோடு!

சின்னதொரு சங்கிலியில்
சதுரமாக கோர்த்த அந்த டாலர்
எனக்கும் அவள் முகவரி
எளிதில் சொன்னதே!


என்னையும் அவளையும்
இன்னும் பிறரையும்
இணைத்தது இங்கேதானே!

மனதிற்கு இதமளிக்க
வாரத்தில் ஓர் நாள்
கூட்டு தியானம்
இங்கேதான் இவளை
கண்டதாக நினைவு!

ஹலோ சிஸ்டர்
ஆர் யூ அபியாசி
சின்னதொரு முகத்தில்
வண்ணமிகு வசீகரம்!


சீனர்களும் மலாய்களும்
சென்ற இடமெல்லாம் சிதறி கிடக்க
அறிமுகம் தெறிமுகம்
தேவையில்லாமல்
அழகான தமிழ் முகம்
காண கிடைத்ததில் - அங்கே
ஓர் அதிசயம்தான்!


ஒரே அலைவரிசையில்
எதிர் எதிர் அலுவலகத்தில்
என் நண்பர் என்றெண்ணியதில்
என் சினேகிதிக்கும் சந்தோஷம்!

மதிய வேளையில்
உணவோடு மனம் விட்டு
மணிநேர பேச்சுக்கள்!

தமிழ் பெண்களே இப்படித்தான்
தலைவனுக்கு படைத்துவிட்டு
தனக்கென்று தட்டில்
தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல
துளியோண்டு சாப்பாடு!

தோழியும் சளைத்தவளா!
தோசை ஒன்றே போதும்
தொட்டுகொள்ள சட்டினியும் சாம்பாரும்
எனக்கு மதிய உணவு
இது போதும் என்பாள்!

ஞாயிறு தோறும்
நாங்கள் சந்திப்போம்
கூட்டு பிரார்த்தனை என்று
தொலைவான ஓர் மையத்தில்!

நான்கு மாதங்கள் கடந்திருக்கும்
நடுவில் ஓர் நாள்
நண்பரே சகோதரா
நான் ஊர் போக
நாளும் வந்து விட்டதே
வேலையை விட மனசில்லை
வேறு வழியுமில்லையே1


ஊர் ஞாபகம் - என்
உற்ற தோழியையும்
உளம் குலைய வைத்ததோ!
பாவம் அவள்!
கல்யாணம் என்ற சடங்கால்
உடன் பிறந்தோர்
உயிர் தந்தோர்
உறவும் நட்பும் விடுத்து
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
இவன் தான் தலைவன்
அவனே உன்னவன்
அன்றிலிருந்து அன்னையும் தந்தையும்
அறிந்தோரும் தெரிந்தோரும்
எங்கோ பார்த்த முகமாய்
என்று காண்போம் இவர்களை
ஏக்கம் கொள்ள வைத்ததோ!


இல்லை நண்பரே
இனிய செய்தியொன்று
இனி நான் ஓருயிரல்ல
எனக்குள்ளுன் ஓர் உயிர்!


ஆச்சரியமும் சந்தோஷமும்
முதன் முதலாய் ஓர் பெண்
முழுகாத செய்தியொன்று
என்னிடம் பகர்ந்ததே!


பின்னொரு நாளில்
பிரார்த்தணை முடிந்து
கடிகாரம் பார்க்கையில்
கரம் ஒன்று பற்றியதே
வணக்கம் பிரதர் நலம்தானே
நலந்தான் நண்பரே ! நீங்கள்!?


உங்களை நானறிவேன்
என்னை நீங்கள் அறியுமோ?
என்னுள் குழப்பங்கள்!


இவள்தான் என் மனைவி - என்
சினேகிதியை கைகாட்ட
சிதறிய சிரிப்பலைகள் - என்
சின்ன இதயமும் நிரம்பியதே!

வெள்ளி கிழமை பயணத்திற்கு
விமான டிக்கட் எடுத்து
வழியனுப்ப வர இயலாது.
வாழ்த்துக்கள் சகோதரி
நிகழ்வுகள் நிழலாய் நகர!


ஞாயிற்று கிழமை
பிரார்த்தனையில்
நான் கண்டேன் அவளை
பயணம் தள்ளி போனதோ!


என்னருகே வந்த அவள்
இனிய நண்பரே
பயணங்கள் தள்ளி போனது
இனி நான் எப்போது
ஊர் பயணம்
எனக்கே தெரியவில்லை!

சின்னதொரு சிரிப்பில்
அவள் மனம் படித்தேன்
எதுவும் விளங்கவில்லை!

டெலிவரி ஆகிவிட்டது
சுக பிரசவம்தான்!

எனக்கும் தலை சுற்றல்
நேற்றுதான் குழந்தை ஜனனம்
இன்று எப்படி இங்கே நடனம்!


குறை பிரசவம் நண்பரே
இரை கொடுக்க கூட
இனிய தாய் வேண்டாமாம்
கனிவான நர்ஸே போதுமாம்!


என் விதி யாரை நோவ
எட்டு மாததில் எனக்கும்
குட்டை காலும் கையுடன் குழந்தை!
மூன்று மாதம் முழுதாய்
முழு பராமரிப்பும்
மருத்துவமணையில்!



கருத்தும் கவனமும்
கவலை கொள்ள வேண்டாம்
குழந்தை இனிதே
அழகான தூளியில்
அமுதுண்டு சிரிக்கிறான்!


இன்று காலையில்
எனக்கும் ஓர் போன்
புரியாத பாஷையில்
ஹலோ அங்கிள்
நவீன் பேசரேன்!



நன்றி: திசைகள்

Receomand this post to other reades :