சங்கிலி தொடர் "ஜோ" வால் வந்த வினை!
சங்கிலி தொடரென்று சிங்காரகுமரனையும் சங்கத்திற்கு பலம் சேர்க்க சந்தர்ப்பம் தந்த உலகம் சுற்றும் வாலிபன் ஜோ விற்கு நன்றிகள்!
பிடித்த 4 விஷயங்கள்
மனிதற்கு செய்யும் தொண்டே மகேசனுக்கு செய்யும் தொண்டு! அந்த வகையிலே கடவுளென்று கருதுவது தாய்நாட்டு தலைவர் அருள்மிகு அப்துல் கலாம்!
கவிதைகள், மனித நேயம் சார்ந்த கதைகள் வாசிப்புக்கள்
கிராமத்து வாழ்க்கை
தமிழ்மணத்தில் வாசிக்க கிடைத்த சந்தோஷம்
பிடித்த 4 கலைஞர்கள்
நடிகரில் கமலஹாசன்
பாடகரில் அனுராதா ஷீராம்
கவிதையில் கவி பேரரசு வைரமுத்து
இசையில் என்றும் இனிமை இசைஞானி இளையராஜா
திரும்ப திரும்ப பார்த்த 4 திரைபடங்கள்
மூன்றாம் பிறை
நாயகன்
அலை பாயுதே
காதல்
வலம் வரும் 4 வலைதலங்கள்
தமிழ்மணம்
விக்கி பீடியா
கூகுல்
யாகூ
வலம் வந்த 4 இடங்கள்
பிறந்து வள்ர்ந்த
புஷ்பவனம்
பிழைப்பு தேடி சென்ற
கோவை
சென்னை
சிங்கப்பூர்
பிடித்த 4 உணவு வகைகள்
பழைய சோற்றோடு கலந்த பழந்தயிரும் வருத்த தயிர்மிளகாயும்
நீந்துவனவற்றில் வாளை மீனில் வகையான சமையல் ( வாளை மீன் வருவல் (மத்த மீனும் வருவலில் புடிக்கும்). உயிருடன் சமைத்த வாளை மீன் குழம்பு)
அம்மாவின் கை பக்குவத்தில் உயிருடன் சமைத்த இரால் குழம்பு
சில நேரங்களில் நானே சமைத்த சமையல்
அழைக்க விரும்பும் வலைபதிவர்கள்
முன்னாள் நட்சத்திரங்கள்
தானு
குமரன்
சிவா
மற்றும் நிலவு நண்பன்
அன்புடன்
சிங்.செயகுமார்
Receomand this post to other reades :
14 Comments:
மாட்டிக்கிட்டீங்களா...மாட்டிக்கிட்டீங்களா.....யப்பா என்ன ஒரு சந்தோசம்....யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். :-))
ராகவன் சார்! என்ன ஒரு நல்ல எண்ணம் ! எண்ணம் போல் வாழ்க!!
விளையாட்டில கலந்துகிட்டதுக்க சந்தோஷம்.
/உயிருடன் சமைத்த இரால் குழம்பு/
உயிருடன் எப்படிங்க சமைக்க முடியும்?
அடடே அனுசுயா வாங்க !.நீங்க ஐஸ்ல வச்ச இரால்தான் சாப்பிட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன். நம்ம ஊட்டுக்கு ஒரு தபா வாங்க. உசிரோட வீட்டுக்கு கொண்டு வந்த இராலை சமைத்து தருகின்றேன். அப்புறம் சொல்லுவீங்க!
உள்ளேன் ஐயா.
நான் அசைவ உணவு உண்ணும் காலத்திலேயே நமக்கு மீன் மற்றும் தண்ணீரில் உள்ள மற்ற ஐட்டங்கள் உள்ளே இறங்காது. இப்போ எப்படி.ஹிஹி.
மாட்டுனதும் இல்லாம என்னைய வேற இழுத்து போட்டுட்டீங்களே :-))..
//** பழைய சோற்றோடு கலந்த பழந்தயிரும் வருத்த தயிர்மிளகாயும் **// ஆஹா..தேவாமிருதம்யா
கொத்தநாரே கடல் ஓரத்தில இருக்கிறோமா !அதேன் கொஞ்சம் மீன் வாசனை!
//** பழைய சோற்றோடு கலந்த பழந்தயிரும் வருத்த தயிர்மிளகாயும் **// ஆஹா..தேவாமிருதம்யா
அந்த ஐட்டம் சாப்புட்டு பல வருஷம் ஆச்சு சிவா. ஊரு போய்தான் சாப்புடனும்!
நன்றி ஜெயக்குமார்..
இந்த நிலவு நண்பனையும் குறிப்பிட்டதற்கு..
எவர் ரசித்தாலும் ஒளி கொடுப்பேன்..
வாங்க ரசிகவ் வந்து ஆட்டத்த ஆரம்பிங்க!
Book me me mudinchu ippa intha villayada....
Book me me mudinchu ippa intha villayada....
வாங்க சினேகிதி! நல்லா இருக்கேளா! எங்க ரொம்ப நாளா ஆளையே காணல?
வந்து ஆட்டத்துல சேர்ந்து கொள்ளுங்கள்!
எப்ப பார்த்தது? எப்படி இருக்கீங்க?
அதுசரி ..//உயிருடன் சமைத்த வாளை மீன் குழம்பு..// அப்டின்னா என்னங்க?
உயிரோடு (நாம) இருந்தாதான் சமைக்க முடியும். சமைச்சா மீனு உயிரோடு இருக்க முடியாது !
அப்போ...?!
Post a Comment
<< Home