...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Saturday, December 31, 2005

புத்தாண்டு வாழ்த்துக்கள்!









நேற்றோடு கழிந்ததே

நெஞ்சிலிருந்த நிறைவான ஆண்டு

எண்ணியதெல்லாம் நடந்தது

எண்ணத்திலடங்காததும் நடந்ததே

மின்னஞ்சல் கண்ணாம்பூச்சி

தண்ணீரில் கண்டம் தமிழ்நாட்டில்

பிள்ளைகளையும் பலி கொண்டதே

பெரும் தீ விபத்தில்

நேற்றோடு ஒழியட்டும்

நெஞ்சகலா நீச நிகழ்வுகள்

சானியாவின் சாகசங்கள்

சோனியாவின் தலைமையில்

சுகமான ஆட்சியில்

செம்மொழியாம் தமிழ்

செவிக்கு நல்லதோர் செய்தி

எண்ணிய திட்டமெல்லாம்

எதுவரையில் இப்போது?

இதுவரையில் இவ்வளதுதானா?

வரும் ஆண்டில் வகையாய்

கற்றோரும் சுற்றமும்

கனிவோடு வாழ்த்திட

இனி ஓர் உலகு செய்வோம்

இனிய இந்நாளிலே

என் உளம் கனிந்த

நண்பர்களே நல்லோரே

உங்களுக்கு என் இனிய

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Receomand this post to other reades :

11 Comments:

At 12:35 PM, Blogger ஞானவெட்டியான் said...

தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

 
At 1:26 PM, Blogger சிங். செயகுமார். said...

வாங்க ஞான வெட்டியான் ஸ் உங்களுக்கும் உங்க ஊட்ல, ஊர்ல உள்ள அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 
At 2:28 PM, Blogger Gnaniyar @ நிலவு நண்பன் said...

கவிதையில் நலம் வேண்டிய நண்பா..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா..

 
At 2:31 PM, Blogger மதுமிதா said...

மனங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் சிங்.செயகுமார்

 
At 4:02 PM, Blogger சிங். செயகுமார். said...

நண்பரே ரசிகவ் ! புதிய ஆண்டு வாழ்த்துக்கள்!

 
At 4:03 PM, Blogger சிங். செயகுமார். said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் மதுமிதா!

 
At 5:34 PM, Blogger சிவா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே! ( இன்னும் சானியாவ விட மாட்டீக்கறீங்க :-))))

 
At 6:54 PM, Blogger சிங். செயகுமார். said...

நண்பரே சிவா! 2005ன் சரித்திர நாயகி சானியா அல்லவா? எப்படி விட முடியும்!

 
At 7:11 PM, Blogger குமரன் (Kumaran) said...

புத்தாண்டு வாழ்த்துகள் சிங்.

 
At 7:55 PM, Blogger கீதா said...

உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

 
At 4:52 AM, Blogger சிங். செயகுமார். said...

நண்பர் குமரன் ,கீதா உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

Post a Comment

<< Home