...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Thursday, December 22, 2005

நான் காதலுக்கு எதிரியா?

மாப்ள இது உங்களுக்கே நல்லா இருக்கா?

என்ன ஜேகே சொல்றீங்க?

ம். இது எவ்ளோ நாளா நடக்குது?

எத சொல்றீங்க?!கொஞ்சம் புரியும் படியா சொல்லுங்களேன்.

அதான்யா இந்த லவ் மேட்டர்.

லவ்வா! யாரு அந்த கௌசல்யா பொண்ணா,அதான் அந்த பையன் கை கழுவிட்டு போயிட்டானே!

யோவ் நான் ஏன்யா அடுத்தவன் லவ்வ பேசறேன், உங்கள பத்திதான் சொல்லிகிட்டு இருக்கேன்.

அதுவா மாப்ளே அதான் இப்போ காண்டாக்டே இல்லயே.கல்யாணம் முடிஞ்சி ஒரு மாதம் இருக்குமா?

நீங்கதான் இன்விடேஷன் பாத்தீங்களே.

கத்திரிக்கா முத்துனா கடைத்தெருவுக்கு வரும்ல அப்ப வச்சுகிறேண்டி.

நானும் அந்த லெட்டர பாத்தேன் ,ஏதோ ஒரு வரிதான் ஞாபகம் இருக்கு.

என்ன பாத்தீங்க சொல்லுங்க!

"ஆம் ரியலி போர்ட்டீன் பிலீஸ் அட்ஜஸ்ட் மீ"

சாரி ஜேகே உங்க கிட்ட சொன்னா சத்தம் போடுவீங்கண்ணு சொல்லல.

இப்ப மட்டும் நான் தட்டியா குடுப்பேன்.

அதெல்லாம் இல்ல ஜேகே ,அந்த புள்ள தான் லெட்டர் குடுத்திச்சி.

அதுக்கு நீங்க என்ன ரிப்ளை கொடுத்தீங்க?

நான் ஒன்னும் ரிப்ளை பண்ணல.

நிச்சயமா?

ஒங்க தல மேல சத்தியமா அந்த பொண்ணு கொடுத்த லெட்டருக்கு ,பதில் லெட்டர் குடுக்கல!

( வித் லவ் மூர்த்தி என்று எழுதப்பட்ட ஒரு கீ செயின் அதை காண்பித்து)

சரி இது என்ன?

அது வந்து அததான் தேடிகிட்டு இருந்தேன்.

இது யாருக்கு கொடுக்க போறீங்க?

யாருக்கும் இல்லயே.

அப்ப டிச் ல தூக்கி போட்டுறேன்.

அய்யோ வேணாம் ஜேகே.

சரி இது என்கிட்டேயே இருக்கட்டும் ,ஒங்க காம்ப்ளிமெண்ட்டா.

################################

2000 அக்டோபர் நானும் நண்பரும் கோயம்பத்தூர்ல வொர்க் பண்ணிட்டு இருக்கோம்
ரெண்டு பேரும் ஒரு சின்ன அறையில முதல்ல தங்கி இருந்தோம்கொஞ்ச நாள் கழிச்சி நண்பரோட உறவு கார பசங்க ,ரெண்டு பேரு வேல தேடி அங்க வந்தாங்களா. ஒகே இதுக்கு மேல ரூம்ல நெருக்கடியா இருக்க முடியாது ,நீங்க மூனு பேரும் இங்க தங்கி கோங்க, நான் தனிய வேற எடம் பாத்துகிறேன்.

சரி ஜேகே.

நான் அப்புறம் ஒரு அக்கா வீட்ல தங்கி இருந்தேன்.
அவங்க வீட்ல ரெண்டு பொம்பள பசங்க.
ஒரு புள்ள எல்..கே.ஜி
இன்னோன்னு ஆறாம் வகுப்பு.
சார் அவரு பெரிய எஞ்சினியர் ட்ராவலிங்லேயே இருப்பாரு.
அவங்க இதுக்கு முன்னாடி யாருக்கும் வீடு வாடகைக்கு விட்டது கிடையாது நான் கொஞ்சம் ரெக்கொயெஸ்டு பண்ணி கேட்டதால ,அவங்க வீட்ல ஒரு ஆளா நானும் தங்கி இருந்தேன்.
கொஞ்ச நாள் கழித்து நண்பரோட உறவு கார பசங்க நகர வாழ்க்கை புடிக்காம ஊருக்கு கெளம்பிட்டாங்க.

நண்பர் மட்டும் தனிய இருந்தாரா,சரின்னு என்கூட வந்து தங்கிட்டாரு.

ஊர்லேர்ந்து போன் வந்திருக்கு ஜேகே

என்ன சேதி?

தாத்தா இறந்துட்டாராம் உடனே கிளம்பனும்

சரி செலவுக்கு பணம் இருக்கா?

ம் இருக்கு

நான் ஆபிஸ்ல சொல்லிக்கிறேன் ஊர்போனதும் மேனேஜர்கிட்ட கால் பண்ணி சொல்லிடுங்க.

ஒரு இரண்டு நாள் கடந்து இருக்குமா?

ஏழு சின்ன சின்ன பொண்ணுங்க. எல்லாமே ஒன்பதாம்கிளாஸ் படிக்கும் புள்ளைங்க.

அன்றைக்கு சாயங்காலம் எங்க வீட்ல ஒரே கும்மாளம் தான், நான் அங்க தங்க ஆரம்பிச்சி மூனு மாசத்துல இன்னிக்கிதான் அந்த புள்ளைங்க நம்ம வீட்டுக்கு வாரங்க.

எனக்கு லாஜிக் இடிக்க ஆரமிச்சி.

நம்மவீட்டு புள்ள ஆறாம் கிளாஸ்.

அந்த புள்ளைங்க ஒன்பதாம் கிளாஸ்.

டியூஷன் கிளாஸுக்கு போன புள்ளைங்க அப்பிடியே இங்க வந்து நைட் எட்டு மணி வரையும் கும்மாளம் தான்.

இந்த மேட்டர் அப்பிடியே ஒரு வாரம் நடந்திச்சி வீட்டுகார அக்கா ஒன்னும் புரியாம என்ன பாத்து முழிக்க நான் அவங்கள பாத்து முழிக்க அப்பிடியே போயிட்டு இருந்திச்சி.
இந்த புள்ளைங்க குசு குசுன்னு பேசிகிட்டு இருப்பாங்க ,என்ன கண்டதும் அப்பிடியே கப் சிப் ஆயிடுவாங்க.

நான் எங்க வீட்டுல இருக்கிற பிள்ளைகிட்ட ,என்னம்ம வினிதா ஏது புதுசா பிரண்டெல்லாம் வீட்டுக்கு வாராங்க.

என்னான்னு தெரியல அண்ணா ,நைட்டு மம்மியும் இதையேதான் கேட்டாங்க!

நண்பர் இன்றைக்கு ஊர்லேர்ந்து வந்து ரெண்டு பேரும் ஆபீஸ் போய் வீட்டுக்கும் வந்துட்டோம்.

வழக்கம் போல அந்த புள்ளைங்களும் வந்துட்டாங்க.

நம்ப நண்பர் வந்திருகிறது அவங்களுக்கு தெரிஞ்சிடிச்சி.

உடனே அங்க டேப் ரெக்காடர்ல பட்டு சத்தம கெளம்புது.

என்ன பாட்டு அது

நம்ம ஊர் குப்புசாமி பாடுனாரே அந்த பாட்டுதான்.

"மச்சான் ஆளான நால் முதலா உன்ன நெனச்சிருந்தேன் " அந்த பாட்டுதான்ஆகா ஏதோ வில்லங்கம் ,இந்த விளையாட்டு நமக்கு வேணாம்னு வீடைவிட்டு கெளம்பினேன்.
நண்பர் தடுத்தி நிருத்தி பிளீஸ் ஜேகே இப்போ போக வேணாம் கொஞ்சம் லேட்டா போங்களேன்.

யோவ் நான் கடை வரைக்கும் போய் வாரேன் ,9 மணிக்கெல்லாம் கடை குலோஸ் பண்ணிடுவாங்க

பிலீஸ் ஜேகே நான் அப்புறம உங்களுக்கு விளக்கமா எல்லாம் சொல்றேன்.

சரி நீங்க விட்டுகுள்ளேயே இருங்க இன்னிக்கி ரெண்டுல ஒன்னு பாத்துருவோம்.

வீட்டு வாசல்ல வந்து உட்காந்து ..

வினிதா இங்க வாயேன்.

எண்ணைங்ணா

ஏதும் வேலைய இருக்கியாம்மா?

இல்லிங்ணா இதோ வந்துட்டேன்.

ஆமா பாட்டெல்லாம் புதுசா இருக்கு .

ஆமாங்ணா நானே இன்னிக்குதான் கேக்கிறேன்

இது யார் பாடுனது?

கொஞ்சம் இருங்க அந்த அக்காகிட்டயே கேட்டுட்டு வாரேன்.

புஷ்பவனம் குப்புசாமியாம் அண்ணே.

நான் எந்த ஊர் தெரியுமா உனக்கு

ஆங் நீங்க புஷ்பவனம்னு சொல்லி இருக்கீங்க

ஒங்க ஊர் காராரா அண்ணே இவரு ?

ஆமாம்.

சரி இது யாரோட கேசட்டு.

தெரியலையலண்ணா ,அனிதாக்க இது யாரோட கேசட்டுன்னு ஜெய்குமார் அண்ணன் கேக்குறாங்க.

...........

இந்த பாடு உனக்கு புடிச்சிருக்கா?
....
அதுகுள்ள வீட்டுகார அக்கா வந்துட்டாங்க.
எழு புள்ளைங்களும் உடனே எஸ்கேப்.
எனக்கு முழுதும் புரிஞ்சிட்டு, எங்கே இருந்து அம்பு எங்க பாயுதுன்னு.

மாப்ள கதவ தொரவுமையா.

அந்த புள்ளங்க எல்லம் போய்டாங்களா?

அவங்க போனா என்ன போவட்டி உங்களுக்கு என்ன?

நீங்க ஆம்பளதான ,ஏன் கதவ சாத்திகிட்டு உள்ளே இருக்கீங்க?

##################
கோயம்பத்தூர்ல அந்த கம்பெனி பேர சொன்ன எல்லாருக்கும் தெரியும்,அதுல சீப் எஞ்சினியர் ,அவரோட மனைவி டெலகம் டிபார்ட்மென்ட்ல ஆபிசர்.


இவங்க வீட்டுக்கு முன்னாடிதான் நானும் நண்பரும் முதல்ல குடியிருந்தோம்
நான்தான் அப்பவே வீடு மாத்தி கிட்டு போயிட்டேனா.
அவங்க வீட்டுல ரெண்டும் பொண்ணுங்க .

சின்ன பொண்ணு மூனாம் வகுப்பு படிச்சா
ரெண்டாவதுதான் நம்ம ஹீரோயின் அனிதா
ஒன்பதாம் கிளாஸ் பொண்ணு.
நண்பருக்கு கெல்த் மெய்ண்டெயின் பண்றதுல கொஞ்சம் ஆர்வம்.
தினம் காலை மாலை எக்சர்சைஸ் பண்ணுவாரு.
நான் அக்கா வீட்டுக்கு குடி வந்து ஒரு வாரம் இருக்கும்.
அந்த பொண்ணு வீட்ல ஏகப்பட்ட கூட்டம்.
அம்பது அருவது கார் நிக்கிது.
என்ன ஏதுன்னு விசாரிச்சா.
பொண்ணு பெரிய மனுஷியாயிட்டாளாம்.
என்னடா இது இயற்கையா நடக்கிற விஷயம் தானே இதுக்கு போயி ஊர் உலகம் சொல்லி உறவு முறை அழைத்து இதெல்லாம் தேவையா? இன்னும் பழங்காலத்திலேயே இருக்காங்க ,சரி ஏதோ அவங்க சமுதாயத்துல இன்னும் பழக்கம் இருக்கு போல!
நாளைக்கி அந்த புள்ள ஸ்கூலுக்கு போக வேணாமா? பசங்க கேலி பண்ண மாட்டாங்க!
நமக்கு ஏனிந்த சிந்தனையெல்லாம் கதைக்கு வருவோம்.

(ஹலோ ஆமாங்க செயகுமார்தான் பேசரேன் ! அப்படியா ,இப்பொ கொஞ்சம் வேலையா இருக்கேனே, ம்ம்ம் , நாளக்கி பாத்துகளாமா? .ஓகே இப்பவே வருகிறேன் . பை)

மன்னிச்சுகோங்க!


கொஞ்சம் அவசரமா வெளியே போறேன் நாளக்கி மீதி கத சொல்லி விடுகிறேன்.

Receomand this post to other reades :

8 Comments:

At 5:15 AM, Blogger சிங். செயகுமார். said...

உங்கள் வருகைக்கு நன்றி ஜேம்ஸ்!

 
At 6:31 AM, Blogger சினேகிதி said...

Sing ena ippidi kopida udane ambo endu vididu ooduringal..keriya vanthu mitcham ellthungo.unga ooru kupusaami oru kooli paadu padinavar SUN TV la theriumo??
...enayila porikeka enna sollichan vellai kooli...oil bath edukiren endu solicham :)

 
At 10:22 AM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் சினேகிதி! இதோ வந்துட்டேன் நாளை கட்டாயம் மிச்சத்த எழுதுறேன் . மன்னிச்சுகோங்க கொஞ்சம் அவசரமான ஜோலி!

 
At 2:30 PM, Blogger தாணு said...

ஜெயக்குமார்,
ஒண்ணும் விளங்கலை. தொடர்கதையா?

 
At 2:55 PM, Blogger Ganesh Gopalasubramanian said...

எனக்கும் ஒண்ணும் புரியல ஜெயக்குமார்

 
At 3:08 PM, Blogger சிங். செயகுமார். said...

தானு அக்கா சின்ன கதை தான்,கொஞ்சம் நிதானமா படிச்சு பாருங்களேன்.இப்ப புரியுதா?

 
At 3:09 PM, Blogger சிங். செயகுமார். said...

கணேஷ் அண்ணே உங்களுக்கும் புரியவில்லையா?

 
At 7:04 PM, Blogger குமரன் (Kumaran) said...

அகநானூறு, புறநானூறு எல்லாம் புரியுது சிங். உங்க கதையைப் புரிஞ்சுக்க ரொம்ப கஷ்டப் பட வேண்டியிருக்கு. எழுத்துப் பிழைகள் வேற இருக்கா. என்ன சொல்ல வர்றீங்கன்னு புரிஞ்சிக்க கஷ்டமாத் தான் இருக்கு. எனக்கு புரியுதான்னு கேட்டா, இல்லைன்னு தான் சொல்லுவேன். :-(

 

Post a Comment

<< Home