...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Tuesday, November 22, 2005

கொஞ்ச நாள் பொறு தலைவி..

முதல் காதல் பெண்ணே!
முழு காதலும் நீயே!
கண் கொண்ட ஈரம் காயும்
உன் சொல் கொண்ட வார்த்தை?
கடி சொல் வேண்டாம் பெண்ணே!
கொடி இடையாளே
கொஞ்சம் பொறு
பஞ்சமின்றி பாசமும்
நெஞ்சோடு நேசமும்
அஞ்சாறு மாசத்தில்
அது வரையில்
எனக்கேன் இன்னொரு காதலி?
வம்பே வேண்டாம்
நீ இருக்கும் நெஞ்சமதில்
நிறைவாய் எந்நாளும்
உன்னோடுதான் விளையாட்டு
கண்ணோடு காண்பதெல்லாம்
கண்ணே நீ நம்பாதே
ஒடோடோடி வருவேன்
இலையுதிரும் காலமிது
வசந்த காலம் வரும்
வாழ்ந்த காலம் சுகம்
மற்க்கவில்லை பெண்ணே
உன்னோடு ஓர் நாளும்
கண்ணோடு நீர் வானம்
நான் என்ன செய்ய?
நிறைய வேலைகள்
நிறைவாய் சம்பளம்
நித்தம் உன் ஞாபகம்தான்
நித்திரை கொண்டு நிம்மதி வாங்கு!
சத்திரம் ஒன்று கண்டு
சடுதியில் கல்யாணம்!

Receomand this post to other reades :

0 Comments:

Post a Comment

<< Home