...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Wednesday, November 02, 2005

என்னோட லைலா.!





எப்போதும் போல அந்த சனிக்கிழமையும் சைனா டவுன் மார்க்கெட்டுக்கு சென்றாள்.ஆர்ச்சார்டு ரோடு விலைவாசிக்கு முற்றும் எதிரான சகாயமான விலையில் கிடைப்பதாலும் மேலும் பேரம் பேசி வாங்கும் சவுகரியத்தாலும் சுதிர்தா அங்கே செல்வது வழக்கம். நார்த் பிரிட்ஷ் ரோட்டுக்கும் அப்பர் கிராஸ் ஸ்ட்ரீட்டுக்குமிடையே அந்த காப்பி ஷாப்பில் அவளுடைய பழைய முதலாளியை சந்தித்தாள். அவரிடம் தான் திருமணத்திற்கு முன் காரியதரிசியாக வேலை பார்த்தாள்.

ஹலோ சுதி எப்பிடிம்மா இருக்கே? உன்னை சந்திச்சதில ரொம்ப சந்தோழம்.ஆமா இங்க எங்கே வொர்க் பன்ரே?
சுதி சின்ன புன்னகையோடு தலையை இடமும் வலமும் அசைத்தாள்.
நீ ஏன் மறுபடியும் நம்ம ஆபிஸ் வரக்கூடாது?
உனக்கே தெரியும் எனக்கு எப்போதும் ஒரு செக்கரட்டரி வேனும்னு. இப்போ வொர்க் பன்றவங்க இந்த மாச கடைசில ரிசைன் பன்றதா சொல்லி இருக்காங்க. நான் இனி புதுசா ஒரு செக்கரட்டரியை அப்பாயிண்ட் பண்றதவிட ஏன் உன்னையே மீண்டும் வேலைக்கி அமர்த்த கூடாது? என்னால இந்த பொண்ணுங்கள புரிஞ்சுக்கவே முடியல, கல்யாணம் ஆயிட்டா உடனே வேலையை விட்ரனுமா என்ன? இந்த போட்டியான சூழ்நிலையில என்னோட ஒரே தேர்வுன்னா அது சுதிர்தா நீதான்!

மிஸ்டர் ஈஸ்வர் நீங்க சீரியசா பேசரீங்க, நான் அத பத்தி ஒன்னும் நெனச்சி பாக்கல.
ஆமாம் உண்மையாதான் சொல்றேன்.
ஆனா எனக்கு ரொம்ப நாளா டச் விட்டு போச்சு என்னால இந்த கால போட்டியோட ஈடு கொடுத்து வொர்க் பண்ண முடியுமான்னு தெரியல
ப்ளீஸ் அத மாதிரியெல்லாம் சொல்லாதே ,உன்கிட்டேர்ந்து பாசிட்டிவ் பீட் பேக் எதிர் பாக்கிறேன் நீ எப்ப வேணும்னாலும் வந்து சேரலாம்.
பொருளாதார வளர்ச்சி பயங்கர வேகமா வளர்ந்துட்டு வருது ஐ மீன் கம்ப்யுட்டர்லே இப்போ எல்லா வேலையையும் முடிச்சிராங்க. இந்த சூழ்நிலையில என்னால எப்பிடி உங்க ஆப்பிஸ்ல திறம்பட வொர்க் பண்ண முடியும்னு நெனைக்ரீங்க?
அது ஒரு பெரிய பிரச்சனையே இல்ல,சில கோர்ஸ் ரீபிரஷ் பண்ணுனாலே போதும் எனக்கு தெரியும் நீ
ஈசியா எல்லத்தையும் பிக்கப் பண்ணிப்பே நம்ம கவர்மென்ட் மணமான பெண்கள் மருபடியும் வேலைக்கு செல்ல எங்கரேச் பண்ராங்க.
உன்னோட மூளை துருபுடிச்சிட்டுன்னு சொல்லாதே, முன்னே வாங்கினத விட எக்ஸ்ட்ரா சேலரி தர்ரேன்
நீ பார்ட் டைமா கூட வந்து வொர்க் பண்ணலாம் கல்யாணம் ஆன பொண்ணுங்க நல்ல பொருப்போட வொர்க் பன்றாங்க உன்ன விட திறம் பட வொர்க் பன்ரவங்கள என்னால தேட முடியாதும்மா. உனக்கு பிறகு என்கிட்ட வொர்க் பண்ணுனவங்க அவ்ளோ பொருத்தமா இல்ல
.ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் ஏகப்பட்ட பொருப்புக்கள் வீட்டு வேலைகள் ,குழந்தைகள், என் கஸ்பன்ட் ரொம்ப பிசியானவர் அவர்கிட்டேயும் பேசனும், இருந்தும் எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்
எனிவே உன்கிட்டேர்ந்து சாதகமான பதில் எதிர்பார்க்கிறேன்
ஓகே பை சுதிர்தா
பை மிஸ்டர் ஈஸ்வர்
"நல்ல விழயங்கள் ஒருமுறைதான் கதவை தட்டும். இதையே ஒரு நல்ல வாய்ப்பா ஏன் எடுத்துக்க கூடாது? குழந்தைங்க ஸ்கூல் போய்டபோறாங்க வீட்டு வேலைக்கு நிர்தா இருக்கா. சமையலும் அவளே பண்ணிடுவா ஸ்கூலேர்ந்து அவளே பசங்கள அழச்சிட்டு வந்துடுவா ,வீட்டுலேயே இருந்தா ரொம்ப போர் அடிக்கும், என்ன இது மீனிங்லெஸ் லைப் இன்னிக்கி நைட் அவ்ர்கிட்ட பேசனும்”
பல யோசனைக்கு நடுவில் இன்னும் அவள் சந்தீப்பிடம் இந்த விஷயம் பற்றி பேசவே இல்லை.

ட்ட்ரிரிர்ங்ங்..!
அய்யோ சுதி அரை மணி முன்னமே அலாரம் செட் பண்ண மறந்துட்டேன்,இன்னிக்கி ஆபீஸ்ல முக்கியமான ஆடிட் இருக்கு,இதோ குளிச்சிட்டு வந்துரேன் ,அதுக்குள்ள பசங்க்ள எழுப்பி ரெடி பண்ணிடு .சிறிது நேரத்திற்கெல்லாம் அலுவலக உடையில் சந்தீப் துரிதமானார்.
பொம்மி,அம்மு எழுந்துறீங்க டாடிக்கு டயமாச்சு தலையணை போர்வையை சரி செய்தபடியே துரித படுத்தினாள்
இன்னிக்கி காலை டிபன் யாரும் சாப்பிட நேரம் இல்ல .பொம்மி,அம்மு அவங்க ஸ்கூல் கேண்டீன்ல சாப்பிடுவாங்க. அந்த இரட்டை குழந்தைகள் யுனிபாம் ஷு சகிதம் ரெடியானார்கள் புத்தக பையில் எல்லாவற்றையும் சரிபார்த்து குழந்தைகளை வாசலுக்கு அழைத்து வந்தாள்.தயாராக இருந்த காரில் கணவனுடன் அனுப்பி வைத்தாள் .கார் சென்று மறையும் வரை கையசைத்து கொன்டு இருந்தாள்
இரவு சந்தீப் சொன்னது நினவில் வந்தது “சுதி இந்த லெட்டரை நாளை போஸ்ட் பண்ணிடு,ரெஜிஸ்தர் போஸ்ட்.தென் மாலன் ஹேமாவுக்கு போன் பண்ணி பேசிடு, அவங்க பையனோட பர்த்டே பங்க்ஷ்னுக்கு லேட்டாதான் போக முடியும். “
சரிங்க கவலையை விடுங்க எல்லாத்தையும் நான் பாத்துகிறேன்.
அந்த இரண்டு குழந்தைகளும் வழக்கம் போல அழும் முகத்தோடு பை சொல்லி காரில் பயணம். கார் மெதுவாக சாலையில் ஊர்ந்து பயணிக்க,கார் கண் பார்வையிலிருந்து தொலைதூரம் செல்லும் வரை வாசலில் நின்று பின் வாசல் கதவை அடைத்து கிச்சனுள் தன்னுடைய காலை உணவுக்காக நுழைந்தாள்.
என்றும் இல்லாத ஓர் அமைதி அவளை சூழ்ந்தது. சந்தீப் குழந்தைகளை அழைச்சுண்டு ஸ்கூல்ல விட்டுட்டு ஆபீஸ் போய்ட்டார்.வீட்டுபணிப்பெண் நிர்தா காலையிலேயே மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டாள் .சுதி மீண்டும் வேலைக்கு செல்வது பற்றி யோசித்தாள். சந்தீப்கிட்ட இதபத்தி பேசலாமா? இல்ல ரகசியமா போய்ட்டு வந்துடலாமா? சந்தீப் வீடு திரும்ப லேட்டாகும் ,நிர்தா அதற்குள் இரவு உணவு தயார் செய்து விடுவாள். மேலும் என் விஷயத்தில் நிர்தா ரகசியம் காப்பாள்.
இருந்தாலும் என்றோ ஒரு நாள் நிச்சயம் சந்தீப் அறிய கூடும். அது அவ்ளோ நல்லா இருக்காது.
சுதி காலை உணவிற்கு பின் தனது படுக்கை அறையில் உள்ள ஆளுயர கண்ணாடி முன் நின்று தனை தானே நோட்டமிட்டாள்.சந்தீப் எப்பிடி என்கிட்ட அவர தொலச்சார்? ஆமா அப்பொதெல்லாம் ஆபீஸ் கெளம்பும் போது சின்னதா ஒரு கிஸ் ,பை பை ஆனா இப்பொதெல்லாம் கொஞ்சம் மாற்றம். ஆனா அதெ சந்தீப் தான்.மறக்காம் மாலையில வீடு திரும்பும் போது அழகிய ரோஜா என் கையில்!ஒவ்வொரு வெள்ளிகிழமையும் வெளியே டின்னர்.
அவருக்கு எவ்ளோ அழகான பொன்னுஙக நட்பு இருந்தும் ஏன் என்னை காதலித்தார்? நான் என்ன அவ்லோ அழகா? இல்லையே. ஆனாலும் வசீகரிக்கும் முகவெட்டு. அதுதானே சந்தீபை அவளுல் வீழ வைத்தது! கிச்சனிலிருந்து கிளம்பிய பாத்திரங்களின் ஓசை அவளின் கவனம் திரும்பியது. நிர்தா அப்போதுதான் மார்கெட்டிலிருந்து வந்திருந்தாள்.சுதி கையிலிருந்த அன்றைய செய்திதாளை மேய்ந்தாள், ஒரு கணவன் - மனைவிக்கு தெரியாமல் வீட்டு பணிப்பெண்ணிடம் ஆசை கொண்டான் மனைவிக்கு தெரிய வர வேறென்ன டைவோர்ஸ்தான். ஆனாலும் அங்கே பிரச்சனை அவர்கள் குழந்தைகளுக்கு யார் பொருப்பு ஏற்பது?

சுயநினைவுக்கு வந்தவள் தன் அழகிய வாழ்க்கையில் சின்ன பதற்றம் தொற்றியது.
நிகிதா 20 வயது பருவபெண் . நன்றாக ஆங்கிலம் பேசகூடியவள் பள்ளி இறுதி வரை படித்திருக்கிறாள் அழகான அறிவுள்ள பணிப்பெண். குடும்ப சூழ் நிலை காரணமாக இவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாய் விட்டாள்.ஒவ்வொரு மாதமும் தன்னுடைய ஊதியத்தை தன் குடும்பத்திற்கு அனுப்பி விடுவாள். சுதிர்தாவின் குழந்தை மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தாள்.தன் குழந்தைகளின் ஹோம் வொர்க் கூட இவள் கவனிப்பதில்லை, எல்லாமே நிகிதா தான், ஈஸ்வர் சொன்ன விஷயங்கள் நினைவுக்கு வர, இந்த சூழ்நிலையில் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நிகிதாவை போஸ்டாபீஸ் அனுப்பி விட்டு ஹேமா மாலன் வீட்டுக்கு போன் செய்தாள். “ஒகெ நெவர் மைண்ட் சுதி , நீங்க பொறுமையா வாங்கோ, பொம்மி அம்முவை மறக்காம அழச்சிட்டு வந்துடுங்கோ. என்னோட சுட்டி பையன் ரொம்ப சந்தோழப்படுவான், இதோ பசங்க வர நேரம் , நேரமாயிடிச்சி சுதி நான் கொஞ்சம் லேட் பண்னி கால் ப்ண்றேன்.”
சுதிக்கு ரொம்ப சந்தோழம் , வீட்டு வேலையெல்லம் நிகிதா முடிச்சுட்டா, குழந்தைகளை கூட்டியார போய்ட்டா ,அவங்க வந்துட்டா லஞ்ச் முடிச்சிரலாம் மதிய உனவை டைனிங் டேபிளில் கடை பரப்பினாள். நாசி துளைக்கும் நான் வெஜ் இருந்தும் நாவில் சுவைக்க எண்ணமில்லையே! குழந்தைகளை குளிக்க செய்து மதிய உணவை முடித்தாள், ஹோம் வொர்க் எல்லாம் செக் பண்ணும்போதே குழந்தைகள் ரொம்பவும் அயர்ச்சியாக இருக்கவே அவர்களுக்கு படுக்கை சரி செய்து உறங்க வைத்தாள்.
இந்த ரொட்டீன் வாழ்க்கை அவளுக்கு அலுத்துவிட்டது, மருபடியும் வேலைக்கு சென்றால் அன்றி லைப்ல ஒரு இன்ரஸ்டிங் இருக்காது , வீட்டை பாத்துக்க நிகிதா இருக்கா , ஸ்கூல் முடிஞ்சி அவளே குழந்தைகளை கொன்டாந்துருவா,படிப்புல சில சமயம் லேக்கா இருப்பாங்க ,ஒரு பிரைவேட் டியுஷன் வச்சுட்டா சரியாய்டும். இன்னும் இத பத்தி சந்தீப்கிட்ட பேசல, ஒரு வேளை இது அவருக்கு புடிக்காம போய்டிச்சுன்னா? இதனால எனக்கும் அவருக்கும் நெருக்கங்கள் குறைஞ்சிடிச்சின்னா? நாம ரிஸ்க்கான யோசனை பன்றோமா? என்னோட சொந்த விருப்பங்கள் அவரோட வேலையை எந்த வகையில் பாதிக்குமோ? இந்த எண்ணங்களூடே மணி ஏழாயிற்று.
நிகிதாவிர்கு உதவியாக டைனிங் டேபிளை ஒழுங்கு படுத்தினாள்.சந்தீப் மெயின் கதவின் சாவி துவாரத்தில் சாவியிடும் சத்தம் அவன் வருகையை அவளுக்கு சொன்னது.
என்றும் இல்லாத குதூகலத்துடன் சின்ன விசிலடித்த படியே ஹாலில் நுழைந்தான் லெதர் பேக், பைலை ஷோபாவில் ஸ்டெய்லாக வீசியபடியே கிச்சன் பக்கமாக துள்ளலோடு வந்தான்.
ம்ம்ம்ம் .... நல்ல வாசனை சோ இன்னிக்கி நல்ல விருந்துதான் ஒரு சின்ன குழந்தையின் குதூகலத்தோடு சுதிர்தாவை ஆதரவோடு அனைத்தான் ,மெல்ல அவள் வாசனை நுகர்ந்த படியே கழுத்து உதடு என முன்னேறி அவளது வலது கன்னத்தில் முத்தமிட்டான்.
என்னை விடுங்க ,சின்ன விசும்பலோடு அவனை உதறினாள் .என்ன ஆச்சு இவளுக்கு? எப்பொதும் இல்லாத ஓர் ஊடல் இன்று மட்டும்!
சந்தீப் அவளை மெல்ல விடுவித்து சின்ன அதிர்ச்சியோடு
ஹேய் சாரி கண்ணம்மா, நீ ஏதோ அப்செட்டா இருக்கே, இருந்தாலும் ஏதோ சொல்ல நெனக்கிரே ப்ளீஸ் சொல்லும்மா.
அவள் மவுனத்தை நீட்டித்தாள் . அவளை ஆதரவாக அனைத்து அவளின் பூமுகத்தை தன் சுட்டு விரலால் உயர்த்திய அவன் கரங்களில் இரண்டு மூன்று கண்ணீர் துளிகள்.
ஹேய் ரியலி சாரிம்மா இன்னிக்கி ஆபிஸ்ல கொஞ்சம் பிசி தட்ஸ்ஒய் ஆம் லேட்
இல்லங்க ,அது இல்ல பிராப்ளம் ... நான் என்ன சொல்ல வர்ரேன்னா....

ம்.. என்ன சொல்ல வர்ரேன்னா
காலையிலேயிலெயெ உங்கிட்ட பேசிட்டு என்கிட்டேயும் ஈஸ்வர் பேசினார்
ஓகே அதுக்கு முன்னால ஒனக்கு ஒரு குட் நியூஸ் எனக்கு புரமோஷன் கெடச்சிருக்கு . இன்னியிலேர்ந்து நான் ஜி.எம். என்னோட அமெரிக்கன் பாஸ் அவரோட துணை நிருவனங்களில் ஒன்னுல என்ன பாட்னரா சேர்த்துகிட்டார் .சுதிக்கு ஆச்சரியம் அவள் காதுகளையே அவளால் நம்ப முடியவில்லை . அவன் தோள் சாய்ந்து அவள் அதரங்களால் அவனை ஈரபடுத்தினாள்
டேய் சுதி என்னோட இந்த முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் உண்மையாகவே யாருக்கு பொறுப்பு தெரியுமா? நீ இல்லாம எனக்கு எந்த புரொமோஷனும் இல்ல!
"ஏன் முடியாது " மெல்லிய குரலில் அவனுள் நோக்கினாள்.
ஒனக்கு தெரியுமா ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கா! அந்த வகையில் நான் குடும்பத்தை பற்றி எந்த கவலையும் வைக்காமல் எல்லாத்தையும் நீயே ஈசியா ஹேண்டில் பன்னிடுற.. என்னுடைய முழு முன்னேற்றமும் உன்னை சார்ந்தே அமைகிறது .வீட்டுக்கு வந்துட்டா சில சமயம் என்னோட அப்பாயின்மெண்டெல்லாம் மறந்துடுவேன். நீ மட்டும் என்ன சரியா வழி நடத்தலன்னா எனக்கு ஏது இந்த புரமோஷன்?

மாலனை பாத்தியா ரியல் எஸ்ட்டேட் பிசினெஸ் பன்றார். அவரோட வைப் வீட்டுல இருக்கிறதே இல்ல.எவ்ளோ போராடுரார், பிசினெஸ் முடிச்சி வீட்டுக்கு வந்தா வீட்டு வேலைகள். ஹேமா மட்டும் பொருப்பா இருந்திருந்தா அவர் எவ்ளோ சந்தோழப்படுவார். நானே பல முறை சொல்லிட்டேன் வீட்டு வேலைக்கி ஒரு ஆள் வச்சுக்கோங்கன்னு, பாவம் மனுஷன் ரொம்ப செரம படுரார். சுதியை தன்னருகே இழுத்து அவள் கண்களில் தன்னுருவம் பார்த்தான். பாத்தியா நான் மட்டும் இந்த உலகத்தில் எவ்ளோ ஆசீர்வதிக்க பட்ட சென்மம்! மென்மையாக அவள் காதினுல் கிசுகிசுத்தான்.
திடீரென்று அவள் எண்ணங்களிலிருந்து விடுதலையானாள் , அவன் கையிலிருந்த ரோஜாஅவள் கையினுள் பரிமாரியது.
அந்த ரோஜாவின் சுகந்தம் அவளை என்னவோ செய்ததது.
ஹேய் சுதி இட்ஸ் டூ லேட் ரொம்ப பசிக்குதும்மா.
அவனின் சிரிய தொப்பயில் செல்லமாக தாளமிட்டாள்.
எங்கே நம்ம கண்மணிகள் ஹால்ல நான் அவங்கள பாக்கலையே
லஞ்ச் முடிச்ச உடனே தூங்கிட்டாங்க இன்னும் எழுந்திரிக்கல , நான் போய் எழுப்புறேன்
ஹேய் நீ எழுப்ப வேணாம் நிர்தா எழுப்பட்டும்
நீ மெய்டு இல்ல
என்னோட லைலா..!

Receomand this post to other reades :

2 Comments:

At 10:45 AM, Blogger krishjapan said...

Horible story. Just Male oriented. Are u still in 20th century?

 
At 11:40 AM, Blogger சிங். செயகுமார். said...

கற்பனை கதையல்ல ,கடந்து போன நிகழ்வு நண்பரே.

 

Post a Comment

<< Home