...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Monday, November 14, 2005

அன்புடன் சுஹாசினிக்கு ....







மணி ரத்னம் எனக்கு புடிக்கும்

இனிய உங்கள் நடிப்பும் புடிக்கும்

கனிவான கரிசனதோடு எழுதுகின்றேன் ..

சிங்காரகுமரன்

எங்கள் தமிழ் மணத்தில் மட்டும்

எத்துனை பிரச்சனைகள்

இந்த எழவெடுத்த குழ்பூ வினால்......

அத்துனைக்கும் நான மட்டும்

இல்லையென்றால்.!?

பாம்பு திண்ணும் ஊரிலே

நடு கண்டம் வேண்டாம் என்றால்

நிச்சயம் தலை கண்டம் தனக்கு வாரா

கோவில் கட்டியவரே!

குல தெய்வத்தையும் இடிப்பார்!

மண் சோறு தின்ற மக்களும் இங்கே!

விண்ணதிற பண்ணாட்டுக்கும்

பாடம் சொன்ன கலாமும் இங்கே!

மறந்தும் போய்

மேற்கத்திய கல்ச்சர்க்கு

வக்காலாத்து வாண்டாமே!

பரம குடிக்கு டிரங்கால் போட்டேன்

சிரமமான சூழ்நிலைதான்

ஊர் பக்கம் வந்த

கார ஒடப்போம்!

உறவு காரங்க அதுக்கு மேல

வெறகு ரெடிண்றாங்க!

வேண்டாங்க பொல்லாப்பு

சின்னதா ஒரு வார்த்த

மன்னிச்சிகுங்க மக்களே!

மக்களுக்கு நல்ல மனசுங்க!

உங்களுக்கு நல்லா தெரியுங்க!

அப்புறம் அடுத்த படம் எப்போங்க?

நமக்கும் அப்பிடியே ஒரு சான் ஸ்!

நல்லா பாட்டு எழுதுவேங்க

சொல்லமா பூச போடாதீங்க

சொன்னதெல்லாம் மனசுல போடுங்க


- சினேகமுடன் சிங்காரகுமரன்

Receomand this post to other reades :

9 Comments:

At 10:23 AM, Blogger சினேகிதி said...

\\நமக்கும் அப்பிடியே ஒரு சான் ஸ்!

நல்லா பாட்டு எழுதுவேங்க\\

neenga sinthuvin blog la elluthura esapadai appidiye manirathnathuku anupunga.

 
At 7:20 PM, Blogger சிங். செயகுமார். said...

நீங்க கொஞ்சம் சிபாரிசு பண்ணுவேளா?

 
At 8:20 PM, Blogger Hari said...

நீங்க வேற தலை, நானே டைம் கிடைக்காம சும்மா கிடைக்கிற கொஞ்ச நஞ்ச கேப்'ல ஏதோ கிறுக்கிட்டு இருக்கேன் ப்லாக்'ல. ட்யுசன் எடுக்குற அளவுக்கு எல்லாம் நம்ம கத்துக்கலைங்க. உங்க கமெண்ட்ஸ்'கு நன்றி.

என்றும் அன்புடன்,

எதிரி
(சொல்லி அடிப்பேன்)

 
At 11:49 PM, Blogger பரஞ்சோதி said...

நண்பரே!

உங்க பங்குக்கும் சுகாசினி, குஷ்பு என்று சொல்லி ஒரு பதிவை போட்டாச்சு.

மக்களும் ஆர்வமாக வந்து போறாங்க.

கவிதை நல்லாவே இருக்குது :) :)

 
At 3:50 AM, Blogger சிங். செயகுமார். said...

அன்புடன் பரஞ்சோதிக்கு
சந்தோசம் நண்பரே நீங்க வந்து போனதுக்கு!

 
At 4:30 AM, Blogger சிங். செயகுமார். said...

எதிரிக்கும் நன்றியுடன் நண்பணின்
நன்றிகள்

 
At 8:32 AM, Blogger அன்பு said...

செயகுமார்,

உங்களுடைய கவிதையொன்று தமிழ்முரசு ஞாயிறுமுரசில் வெளியாயிருந்தது, பார்த்தீர்களா...

பாராட்டுக்கள்.

 
At 4:22 PM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் அன்பு ! இன்னும் பார்க்க வில்லை உங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே.சந்தோஷம்.
நண்பரிடம் சொல்லி செய்திதாள் எடுத்து வைக்க சொன்னேன் . பார்க்கலாம் . வலைப்பக்கம் வந்தமைக்கு நன்றி

 
At 4:25 PM, Blogger சிங். செயகுமார். said...

நண்பரே போலியன் கொஞ்சம் பொறுங்க ! அவங்கட்ட கேட்டு சொல்றேன் .ஓகேவா?

 

Post a Comment

<< Home