...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Wednesday, November 23, 2005

காத்திருப்பாய்...

உன்னோடும் நான்
உறங்குகின்றேன்
கன்றோடு கனிவாய்
மன்றாடும் மாட்டினம்
மன ஊஞ்சல் தனில்
தினம் உன்னோடு சதிராட்டம்
கனநேரம் காணவில்லை
என் கனவில்
உடன் கட்டை ஓர் நினைவு
கடன் என வாழ்க்கையேன்
கண்ணாடி பார்க்கையில்
முன்னாடி உன் முகம்
நினைவுகள் தினம்
அனைவுகள் சுகம்
உன் மடி சேரும் நாள்
கண் மூடி காத்துருப்பேன்
மன் மூடி செல்லும் முன்னே
மனையே உன்னில் சேர்வேன்
கலங்காதிரு
துலங்கும் ஓர் பொழுது
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
கண்ணோடு இமை போலே
கைசேர்வோம்
மைவிழியாளே
உன்னோடு சேர்வேன்
உன் நினைவோடு இங்கே
கடிமனம் வேண்டா
நொடி பொழுது சாரல்
பொடி நடை போடுவோம்
புயலென வருகிறேன் !

Receomand this post to other reades :

0 Comments:

Post a Comment

<< Home