...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Tuesday, August 22, 2006

வலைப்பதிவர் சுற்றுலா - 4


வலைப்பதிவர் சுற்றுலா - 5

மழையின் வருகையோடு மலைக்கோவில் பயணங்கள். நல்லவேலையாக போக்கு காட்டி சென்றதால் வெயிலின் உக்கிரங்கள் தனிந்து இதமான மாலையில் உள்ளே நுழைகின்றோம் .படிகளாக செதுக்கிய வழிகளின் ஊடே பாறை துண்டு ஒன்றில் ஏறி நின்று பள்ளங்களின் பசுமையும் கவனம் சிதறினால் மறுகணம் மடுவுக்குள் அனைவரும் எனும் திருப்பத்தில் நின்று கொண்டோம். சிலர் மட்டும் தள்ளி சென்று தங்கள் உலகில் நின்றார்கள்...



குகைக்கோவில்களில் பல்லவர்களுக்கு பின் தங்கள் திறமைகளை காமித்த சில காதல் வயப்பட்ட ஜென்மங்கள் வெள்ளெழுத்துக்களில் தங்களோடு தங்கள் ஜோடியை கைகோர்த்து வந்து வலைப்பதிவர்களின் கண்களுக்கு விருந்தானார்கள்.

க.பி.கழக தலைவர் தன் உயிரினையும் மறந்து மலையில் மையல் கொண்ட அந்த காதல் ஜோடிகளுக்கு மரியாதை செய்ய புறப்பட்டு பின் கழக நலன் கருதி தன் முடிவை பரிசீலனை செய்தார்..

உடன் வந்திருந்த திரைப்பட இயக்குனரின் பார்வைகளாலேயே காதல் காட்சிகள் படம் பிடிக்க பட்டன.பல காட்சிகள் 'கட்" சொல்லப்படாமலேயே நீண்ட நேரங்கள் புதுமுக நடிகர்கள் என்ற பதட்டமில்லாமல் பார்வையாளருக்கு விருந்து வைத்தனர்.

மந்திகளின் பலத்த கரகோழ வரவேற்பில் தன்னை மறந்த சிலர் அவர்கள் மொழியில் சில கணங்கள் அங்கலாய்த்தனர்.

கூரையில்லா மண்டபமாய் நெடுக்கில் அகலமான பாதையோடு கம்பீரமாக நின்ற அந்த லை குடைவின் மறுபுத்தில் சிறிது நேரம் இளைப்பாறல்.



இன்னும் சற்று நேரத்தில் சாய்ந்து விடுமோ என அஞ்சப்படும் பாறைதுண்டு
அதனை தன் கையால் தாங்கி பிடிப்பது போல காட்சி அமைப்பு - டைரக்டரின் பல டேக்குகளை வாங்கிய அந்த நடிகை... அவளின் நடிப்பையும் மிஞ்சிவிட்டன சில காதல் ஜோடிகள். நீங்கள் செய்வதெல்லாம் சினிமா வித்தைகள் இதோ பாருங்கள் எங்கள் உயிரையும் கருத்தில் கொள்ளாமல் உங்களுக்காக எங்கள் காட்சிகள் என் சில ஜோடிகள் சாய்ந்த பாறைத்துன்டின் அடிப்பகுதியில் நிமிர்ந்த நிலையில் சில முத்த காட்சிகள்..

தொடர்ந்து வந்த கற்சிற்பங்கள்,பாதி மட்டுமே முடிவடைந்த நிலையில்
உயிரில்லா சிற்ப்பங்கள் ,புராதண கதைகள் சொல்லும் கற்சிற்ப காட்சிகள்
இருந்தும் க.பி.கழகம் தேடிய புத்தர் சிலை மட்டும் கடைசி வரை கண்ணில்
படவில்லை.

மேகம் கருக்க மெல்லிய தூரலில் மெதுவாக ஐந்து ரதம் நோகி நடை பயின்றோம்.

"குடைகுள் மழை
கோடம் பாகம் சினிமா கதை

குகைக்குள் மழை
முதன்முதலாய்
வலைப்பதிவர்
சுற்றுலா கதை"

--கவிதை உபயம் யெஸ்.பால பாரதி


ஐந்து ரதம் நோக்கி அன்புடன் அருள்

Receomand this post to other reades :

5 Comments:

At 11:33 AM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்ல ரிலே தொடர். நான் படிச்சவரை ஆறோட நிக்குது.

புகைப்படங்களில் நம்ம ஊரைக் காட்டியதற்குப் பிரத்தியேக நன்றிகள்.

சென்னையிலிருக்கும் தமிழ் வலைப்பதிவாளர்கள் புகைப்படங்களுக்கென்று ஒரு கூட்டு வலைப்பதிவு வைத்து, என்னை மாதிரி ஆட்களை அப்பப்ப காதில் புகை வருமாறு செய்யலாமில்லையா? என்ன சொல்றீங்க? நினைச்சா, சென்னைக்கென்றே ஒரு தனிப்பதிவுகூடத் தொடங்கலாம். ;)

புகைப்படங்களில் இருப்பவர்களில் ஓரிருவரை அடையாளம் காண முடிகிறது. கொஞ்சம் பெயர் போட்டிருக்கலாமே.

சுவாரசியமான அனுபவம் - எங்களுக்கும்.

 
At 12:07 PM, Blogger நாகை சிவா said...

நண்பா! ஊரில் கலக்கி எடுத்து இருக்கீங்க போல. அடுத்த பயணம் எப்ப?

 
At 2:07 PM, Blogger We The People said...

சிங் ஜெயகுமார், குடைக்குள் மலை மேட்டரை மறந்திட்டீங்களா?

 
At 6:38 PM, Blogger மதுமிதா said...

நானும் இன்னும் மகாபலிபுரம் போனதில்லை சிங்.செயகுமார்

அதுவும் மழையோடு!!!!!!!!!
ம்ம்ம்.........

 
At 2:01 AM, Blogger வீரமணி said...

உடன் வந்திருந்த திரைப்பட இயக்குனரின் பார்வைகளாலேயே காதல் காட்சிகள் படம் பிடிக்க பட்டன.பல காட்சிகள் 'கட்" சொல்லப்படாமலேயே நீண்ட நேரங்கள் புதுமுக நடிகர்கள் என்ற பதட்டமில்லாமல் பார்வையாளருக்கு விருந்து வைத்தனர். ஜெய்.. யாராவது தப்பான படம்னு நெனைச்சிக்கப் போறாங்க தலைவா..கண்ணனை கேட்டதாக சொல்லுங்கள்..வீரமணி

 

Post a Comment

<< Home